உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்



அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தைத் தங்களின் சுயலாபங்களுக்காகச் சில தரப்பினர் தேவையற்ற அரசியல் பிரச்சினையாகவும் சர்ச்சையாகவும் மாற்றி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசானது நாட்டின் பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்று ஆட்சிப் பீடமேறிய ஒரு அரசாங்கமாகும். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இந்த அரசு தற்போது முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் தற்போதே ஒரே வார்த்தையில் எம்மால் சான்றிதழ் வழங்கிவிட முடியாது.

அதேபோன்று, எதிர்காலத்தில் நாட்டில் முற்றிலும் புதியதொரு மூன்றாவது அரசியல் சக்தி உருவாகும் எனத் தாம் நம்பவில்லை. தற்போது களத்தில் உள்ள அரசியல் சக்திகளே தொடர்ந்தும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளுடன் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது எதிர்கால அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம் பொதுவாக நல்ல முறையிலேயே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக வெவ்வேறு வழிகளில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகப் பொதுவெளியில் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்ற போதிலும், உண்மையான குற்றவாளிகள், ஊழல்வாதிகள் மற்றும் நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்த நாசகார சக்திகளுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில அரசியல் தரப்பினர் திட்டமிட்டபடி ஒரு அரசியல் சர்ச்சையாக மாற்றி வருகின்றனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் சிலர் தற்போது உயிரிழந்துள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எஞ்சிய உறுப்பினர்கள் அல்லது அவர்களுக்கு வெளியில் இருந்து நிதியுதவியும் ஆதரவும் வழங்கியவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் மீதும் தட்டாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாய வேண்டும்.

அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மேற்கொண்டு வரும் உண்ணாநோன்புப் போராட்டம், இறுதி நோக்கில் அவருக்கே பெரும் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த உத்தியால் அவர் உடலளவில் மேலும் பலவீனமடைந்தால், நீதிமன்றத்தில் தமக்கான சட்டப் போராட்டத்தையும் வழக்கையும் தைரியமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மன வலிமையையும், உடல் ஆற்றலையும் அவர் முழுமையாக இழக்க நேரிடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0