உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினையை ஆராய விசேட குழு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது மற்றும் அங்குள்ள குறைபாடுகளைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காகச் சுகாதார அமைச்சின் மட்டத்தில் விசேட குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட்டுத் தனியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சனிக்கிழமை விசேட உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தௌிவுபடுத்தினார்.

வைத்தியசாலை வளாகத்துக்கு வருகை தந்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் பிராந்தியத்தின் மிக முக்கிய பிரிவான புற்றுநோய் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், விசேட புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவர்களுடன் அத்தியாவசியத் தேவைகள், மருந்துப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர், “தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்த்து, வடக்கு  மாகாண மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கில் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்றார்.

அத்துடன், வைத்தியசாலை வளாகத்தில் தற்போது பாதியிலேயே கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுப் போயுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் எஞ்சிய பணிகள் அனைத்தும், எதிர்வரும் காலப்பகுதியில் அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சருடன் இணைந்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க மற்றும் வடக்கு மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள், வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0