உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த இருவர் ஆகிய 4 பேரையும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதான நால்வரும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாசவால் பிறப்பிக்கப்பட்டது.

நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த இயன்முறை வைத்தியர் கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த இருவர் ஆகிய 4 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஆதரவளித்த குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மூன்று சந்தேக நபர்களும், பிரதான சந்தேக நபர் தப்பிக்க உதவிய குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரியும் என 4 பேரும் இன்றைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபரின் குழந்தையைத் தாயின் காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார் என நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் ஆய்வாளர் பி.எஸ்.சி. சஞ்சீவ தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0