உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இடைநிறுத்தியுள்ளது.

இந்த விடயம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சரித் அபேசிங்க நேற்று வியாழக்கிழமை 25ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்தே கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த இலஞ்ச ஊழல் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2023ஆம் ஆண்டில், சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினராகவோ, தொகுதி அமைப்பாளராகவோ அல்லது கட்சியின் எந்தவொரு பதவியிலுமோ இருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுவதை தமது கட்சி எப்போதும் ஆதரிக்கும் எனவும், அத்தகையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்க்காது எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0