உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் வீடு திரும்பாததால் இளைஞன் தந்தையார் தேடிச்சென்றபோது குறித்த இளைஞன் இன்று (26) காலை குளத்தில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர கண்ணையா அன்பரசன் எனும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.

குறித்த இளைஞனுக்கு வலிப்பு வருவது வழமையென்றும் மீன்பிடிக்கச் சென்ற சமயமும் வலிப்பு ஏற்பட்டு மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சடலத்தின் கையில் மீன்பிடிக்கும் தூண்டில் தடி பற்றிப்பிடிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டுத்துவக்கு வெடித்ததில் குறித்த இளைஞனின் சகோதரரும், 2009ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் மாத்தளன் பகுதியில் இளைஞனது தாயும், சகோதரியும் மரணித்துள்ளார்கள் என்பது தொடர் துயரங்களாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

73 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0