உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான
உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தொடர்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடும்போது,

கைதுகள், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பதை விட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்தே பொதுமக்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உண்மையில் நாட்டை சூறையாடிய விடயங்களுக்காக நாட்டின் ஜனாதிபதி அக்கறை செலுத்துவது காலத்தின் தேவையாகும். நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவதற்கு வளங்கள் சுறண்டப்படுவதும் மக்கள் வரிப்பணம் வீண் விரயமாவதும் ஒரு காரணமாகும்.

எனவேதான், நாம் மக்களின் தேவையறிந்து சேவை செய்வதற்கு ஊழலற்ற நேர்மையானவர்களை அடிமட்ட அரசியல் களத்திலிருந்து சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக்க முயற்சி செய்கின்றோம். அதனால் கல்முனை மாநகர பிரதேச மெங்கும் இம்முறை நாம் சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கும் நிலையில் தேர்தல் வேட்பாளர்கள் பிரதேசத்திற்கும் நாட்டுக்கும் உகந்தவர்களாக எதிர்காலத்தில் செயற்படுவார்கள்.

எனவே, சாய்ந்தமருது கல்முனை பிரதேச மக்கள் எமது கைகளை பலப்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0