உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“அரசாங்கம் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கம் முன்னெடுக்கும் தூய்மைப்படுத்தல் திட்டங்கள் அனைத்தும் வெறும் அரசியல் நாடகங்களாகும். அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்பிக்களும் புல் வெட்டும் இயந்திரங்களை கையில் ஏந்திக்கொண்டும், வீதிகளில் வர்ணம் பூசிக்கொண்டும் ஊடகங்களுக்கு நாடகம் ஆடுகின்றனர்.

“சாதாரண ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பாதுகாப்பு வலயங்களில் கட்டியுள்ள தற்காலிக வீடுகளை இடிப்பதற்குச் சட்டம் பாய்கிறது.

ஆனால், அதே பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள அமைச்சர்களின் சொகுசு விடுதிகளையும் பெரிய ஹோட்டல்களையும் தொடுவதற்கு அரசாங்கத்திற்குப் பயமா? அந்த பெரிய புள்ளிகளை உங்களால் ஏன் இன்னும் அகற்ற முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0