உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வாருங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கத் தயாராக உள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரைவலை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-
“யுத்தத்தாலும் தொடர்ச்சியான புறக்கணிப்புகளினாலும் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, அடுத்ததாக நடைபெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் துறைசார்ந்தவர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் அனைத்து சாதகமான நடவடிக்கைகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனது முழுமையான ஆதரவையும், பங்களிப்பையும் நான் வழங்குவேன்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனக்குச் சில்லறைத்தனமான அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோருடன் ஒன்றிணைந்து நான் ஒரே மேடையில் ஏறிய போதும் இதனையே கதைத்தேன். இனியும் தொடர்ந்து பேசுவேன். என்னிடம் எவ்வித குறுகிய அரசியல் நோக்கமும் கிடையாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0