போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து டுபாய் வழியாக செவ்வாய்க்கிழமை (23) இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.
அவரது பைகளை சோதனையிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தொகையின் மதிப்பு 352 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
