உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதைத் தனது அர்ப்பணிப்பான செயல்களின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மொரட்டுவை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உலகப் புகழ்பெற்ற நிபுணர்கள் சுரேஷ் சலேயை ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி என்று பாராட்டினாலும், தற்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகச் சுட்டிக்காட்டிய கம்மன்பில, எனினும் தனக்குத் தெரிந்த தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்களைத் தனது சொந்த உயிரைப் பணயம் வைத்தாவது பாதுகாப்பதன் மூலம், தான் ஓர் உன்னதமான இராணுவ வீரன் என்பதை அவர் நிரூபித்து வருகின்றார் என்றும் கூறினார்.

சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது அவரிடமிருந்த அனைத்து புலனாய்வுத் தகவல்களையும், தகவல் வழங்குநர்களின் விவரங்களையும் அரசிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று ஆளும்கட்சியிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது அவர்களின் அறியாமையையே காட்டுகின்றது என்று சாடிய கம்மன்பில, 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவர் ஒரு வலுவான தகவல் வழங்குநர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளார் என்றும் விளக்கினார்.

மேலும், தகவல் வழங்குநர்கள் அனைவரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், அவர்கள் தாங்கள் முழுமையாக நம்பும் குறிப்பிட்ட தனிப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அத்தகைய தகவல்கள் குறியீட்டு முறைகள் ஊடாகவே அரசின் உயர் மட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

புலனாய்வுத் தகவல் வழங்குநர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்களை அரசிடம் அத்துமீறி வழங்குவது என்பது, நாட்டின் பாதுகாப்பு வரலாற்றில் இரண்டாவது “மில்லேனியம் சிட்டி” காட்டிக்கொடுப்பாகவே அமையும் என்றும் கம்மன்பில இங்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த 2002 மற்றும் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பின் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்கள் பொலிஸாருக்குக் கசிந்தமையால் சுமார் 73 தகவல் வழங்குநர்களும் யுத்தவீரர்களும் படுகொலை செய்யப்பட்டுத் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான மற்றும் ஆபத்தான நிலைமை இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, சுரேஷ் சலே தனது உயிரைப் பணையம் வைத்து தன்னிடம் உள்ள விவரங்களைப் பாதுகாத்து வருகின்றார் என்றும், அவரது இந்தத் தேசப்பற்றுமிக்க சேவைக்கு நாம் தலைவணங்கி மரியாதை செலுத்துகின்றோம் என்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0