உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாடாளுமன்றத்தில் பெரும் போர்க்களம்; செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கூச்சல் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக சபை நடவடிக்கைகள் சபாநாயகரால் 10 நிமிடங்களுக்கு அவசரமாக ஒத்திவைக்கப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் தற்போதைய முக்கிய கட்டமைப்புப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் முறைப்படி பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.

எனினும், நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த அவசர விவாதக் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இதற்காக நாடாளுமன்றத்தில் தற்சமயம் நேரம் ஒதுக்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார். சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவணைத்துக்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி முன்னேறி, நாடாளுமன்றத்தின் இறையாண்மையின் சின்னமான செங்கோலைக் கைப்பற்றவும் முயன்றனர்.

இதனை ஆளும்கட்சி உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டதால் இருதரப்புக்கும் இடையே சபைக்குள் பெரும் தள்ளுமுள்ளு நிலவியதுடன், சபையே போர்க்களமாக மாறியது.

சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாத அளவுக்குப் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துத் தனது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.

இந்தச் சம்பவம் நாடாளுமன்ற வட்டாரத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0