உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (SCIB) பொலிஸ் பரிசோதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகனப் புலனாய்வு விசாரணை ஒன்றில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் இன்றி சாதாரண முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, வாகனத்தை விடுவிப்பதற்காக ஒருவரிடமிருந்து இவர் 11 இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளார்.

இதில் முதற்கட்டமாக கடந்த மே 30ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று இரவு எஞ்சிய 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0