ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இன்று (22) நண்பகல் சுமார் 12.30 மணியளவில் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சாரதி பயிற்சி வாகனங்கள், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.