உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, ஊழலையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. சுங்கச் சட்டத்தை மீறி விடுவிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்கள் குறித்து இந்த அரசில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மறுபுறம், ஒருசில பௌத்த பிக்குகளின் முறையற்ற செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி, ஒட்டுமொத்த புத்த சாசனத்தையும் மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புத்தசாசனத்தை இல்லாதொழித்து இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றும் செயற்பாடுகளுக்கே அரசு முன்னுரிமையளித்துள்ளது.

இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வரலாற்று விடயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல், இந்தியாவுடன் அரசு செய்துகொண்ட பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்குக்கூட வெளிப்படுத்தப்படவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறது.

மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேயை, நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவரைப் போன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வருகின்றனர்.

மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி எரிபொருட்களின் விலையை அரசு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. அதிக விலைக்கு எரிபொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு, அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் மின்கட்டணமும், எரிபொருட்களின் விலையும் மீண்டும் அதிகரிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை 56 நாட்களில் நாம் மீளக் கட்டியெழுப்பினோம். ஆனால் டித்வா அனர்த்தம் ஏற்பட்டு 7 மாதங்களாகியும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு இந்த அரசு தான் கூறிய எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதனால்தான், கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புக் கூட்டங்களை நாம் நடத்தி வருகின்றோம்.

நாடு தழுவிய ரீதியில் மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரட்டியடிப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0