உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பியகம ஆகிய பகுதிகளிலும் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, கண்டி, இரத்தினபுர மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் டொக்டர் பிரஷில சமரவீர (Prashila Samaraweera) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலையீடு மற்றும் தொடர்ச்சியான டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இருந்தபோதிலும், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் சமூகத்தின் அலட்சியம் ஒரு பெரும் சவாலாக நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால், இந்த வார இறுதியில் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு டொக்டர் சமரவீர பொதுமக்களை வலியுறுத்தினார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 45,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0