நயினாதீவு கடலில் உயிரிழந்த அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை.!
நயினாதீவு கடலில் உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
இவரது தந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தவேளை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் கடலில் உயிரிழந்துள்ளார்.
இது இவ்வாறு இருக்கையில் கஜவர்சன் சிறந்த பெறுபேற்றினை பெற்று தனது தந்தை – தாய்க்கும், பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.