உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிறுநீரக மாற்று சிகச்சைக்காக முன்னாள் போராளி ஒருவர் நிதிஉதவி கோரல்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிதியுதவியைக் கோரியிருந்த முன்னாள் போராளி, தமக்கு தாராளமாக உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவரே இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகி உயிருக்குப் போராடி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் விடுத்த அவசர வேண்டுகோளின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஒன்றிணைந்து இதுவரை 31 இலட்சத்திற்கும் அதிகமான பண உதவிகளைச் செய்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் தனக்குக் கைகொடுத்த தமிழ் மக்களுக்குத் தனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட கிரேசியன், தனது அறுவை சிகிச்சை முழுமையாக நிறைவேறுவதற்கும், தனது பிள்ளைகளுடன் மீண்டும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இன்னும் 50 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஆதங்கத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொள்கையில்:
“எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எஞ்சிய தொகைக்கும் எனக்கு உதவுங்கள்” எனப் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்.

போராளியின் சிகிச்சைக்குப் பங்களிக்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத்அல்லது தொலைபேசி எண் வழியாகவோ நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.

நம் தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தொலைத்த ஒரு போராளியின் உயிரைக் காக்கவும், ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் தம்மாலான உதவிகளை வழங்குமாறு உலகத் தமிழ் உறவுகளிடம் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வங்கி விபரங்கள்:
பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan)
வங்கி: லங்கா வங்கி (BOC)
கிளை: கல்வியங்காடு
கணக்கு இலக்கம்: 94948569
தொடர்பு இலக்கம்:
தொலைபேசி: 0775621613

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0