உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு கல்கிசை நீதவான் காஞ்சனா என். சில்வா இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் காணப்படுவதால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (19) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவு இல்லாமையினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி அன்றைய கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரது தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், தற்பொழுது புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0