உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம், அரியாலை – நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட காலமாக மீண்டும் கடமைக்குத் திரும்பாமல் இருந்துள்ளார். இந்நிலையிலேயே, அவர் நீண்ட நாள்களின் பின்னர் இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்குச் சென்று கடமையைப் பொறுப்பேற்க முயன்றுள்ளார்.

இதன்போது, உரிய கால எல்லையைத் தாண்டி நீண்ட நாள்கள் கடமைக்குத் சமூகமளிக்காமை குறித்துப் பலாலி முகாமின் உயர் இராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்கு நேரில் சென்று உத்தியோகபூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் அவருக்குப் பணித்துள்ளனர்.

அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய அந்தச் சிப்பாய், மதியமளவில் அரியாலை – நெளுக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பாதையினூடாகப் பயணித்த ரயிலுடன் மோதியே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தலைமையகத்துக்குச் சென்று விளக்கம் கொடுக்கப் பணித்தமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

58 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0