உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எரிபொருட்களின் விலையை குறைப்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க தற்போதைக்கு சாத்தியமில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பே தற்போதும் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விளக்குவதற்காக இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் நுகரப்படும் எரிபொருளானது சில மாதங்களுக்கு முன்னர் கணிசமான அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

அந்த அதிக விலை எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருக்கும் வரை, உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது.

எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு தீர்ந்து, குறைந்த விலையிலான எரிபொருள் இறக்குமதிகள் நாட்டிற்கு வரத் தொடங்கியவுடன், அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகளை மறுபரிசீலனை செய்ய முடியும்.

அண்மையில் நாட்டிற்கு வந்த எரிபொருள் கப்பல்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டவையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உலக சந்தையின் குறைந்த விலை பலனைப் பெறுவதற்கு முன்னர், கடந்த காலங்களில் அதிக விலைக்கு ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளையே நாடு முதலில் நுகர வேண்டியிருக்கும் என்றார்.

குறைந்த விலையிலான எரிபொருள் நுகர்வோரை சென்றடைவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், விலைகள் குறையும் என எதிர்பார்ப்பதாகவும், அது நடக்கும் போது தற்போதைய நிவாரணத்தைப் பராமரிப்பதா அல்லது எரிபொருள் விலையை மேலும் குறைப்பதா என்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

38 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0