உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுதலை செய்ய உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா, அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்புச் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னரே மேலதிக நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய அரச கடற்படை அக்கடமி ஆகியவற்றுடனான யோஷித ராஜபக்ஷவின் தொடர்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று காலை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த யோஷித ராஜபக்ஷவிடம் அதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தினர். அதன் பின்னர், விசாரணைகளின் அடிப்படையில் அவர் முற்பகல் வேளை கைது செய்யப்பட்டு பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

30 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0