ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது.
ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த நானுஓயா முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த புகையிரத வீதியில் தாழிறக்கம் ஏற்பட்ட அனைத்தும் பகுதிகளையும் நானுஓயா புகையிரத நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அதிகாரிகள், பொறியியலாளர்கள் இணைந்து துரிதமாக செயல்பட்டமையால் மீண்டும் இச் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் நானுஓயா முதல் நாவலப்பிட்டி வரையான வீதிகள் வெகு விரைவில் செப்பனிடப்பட்டு அச் சேவையும் விஸ்தரிப்பு செய்யப்படவுள்ளது என தெரிவித்தார்.