அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!
அரசாங்கம் தேர்தல் காலத்தில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என வீட்டு வேலை பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் ப்ரோட்டெக்ட் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி,
வீட்டு வேலை பணியாளர்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் அண்மையில் புதிய சட்டங்கள் மற்றும் தொழிலாளர் தொடர்பான கொள்கைகளை அமுல்படுத்தியபோதும், வீட்டு வேலை பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் போதுமான அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டு வேலை பணியாளர்களுக்கான உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.