உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரின் சீற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டியும், இதற்கான வலுவான காரணங்களையும் நிர்வாக தெரிவுக் கூட்டத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களையும் சுட்டிக்காட்டி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடிதம் எழுதியுள்ளார்.

அவரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள்

  1. 21.10.2025 அன்று காங்கேசன்துறைத் தொகுதிக்கான நிர்வாக தெரிவு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு தெரியாமல் ஏற்கனவே இயங்கு நிலையில் இருக்கும் தொகுதி நிர்வாகத்திற்கு தெரியாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினரை அழைத்து புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றது யாப்பு விதி முறைகளுக்கு முரணானது, இது தொடர்பாக தொகுதி கிளை நிர்வாகிகள் கட்சியில் முறையிட்டுள்ளனர்.
  2. 23.04.2026 அன்று வட்டுக்கோட்டைத் தொகுதியில் இடம்பெற்ற வெற்றிடம் நிரப்புதல் எனும் பெயரில் புதிதாக நிர்வாக தெரிவுக்கு மாவட்ட தலைவர் செயலாளருக்கு தெரியாது கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களை தொலைபேசி மூலம் அழைத்தும் பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டும், காரைநகர் பிரதேசத்தையும் இணைத்து தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது யாப்பு விதிகளுக்கு முரணானது, இது தொடர்பாக ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையிலும் தொகுதியின் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு முறையிட்டுள்ளனர்.
  3. 31.05.2026 அன்று யாழ் மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இன்றி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தலைமை தாங்கி கூட்டம் நடைபெற்ற வேளை புதிய நிர்வாக தெரிவு தொடர்பாக தெரிவு செய்ய முன் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கேட்டபோதும் சந்தர்ப்பம் தரவில்லை, ஐனநாயக கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களை கேளாது அராஜகமான முறையில் ஐனநாயக விரோதமான முறையில் கூட்டத்தில் தலைமை தாங்கி நடாத்திய பதில் செயலாளர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிதாற்போல் அமைந்தது. தலைமை table இருந்து தெரிவு செய்தால் மறு தெரிவு இருக்க கூடாது என மிரட்டி கூட்டத்தை தலைமை தாங்கிய பதில் பொது செயலாளரால் எச்சரிக்கையாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் முற்றிலுமாக யாப்பு விதிமுறைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான செயலாகும்.
  4. கடந்த தலைவர் தேர்வில் தொகுதி என்பதை பிரதேச ரீதியானது என கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுசபைக்கு 5 பேர் படி 10 பேர் தெரிவு செய்து தலைவர் தேர்வு நடைபெற்றது. இந்த நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறை, இப்போது தொகுதி என ஒன்றாக இணைத்து தெரிவு செய்யப்பட்டது எந்த முறையிலானது, யாருடைய தீர்மானம் என்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு, கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்களையும் சுட்டிக்காட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபனால் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0