ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமானது வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் யாழ் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்றது.
குறிப்பாக இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்றது.
இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என பலரும் கலந்து கொண்டனர்.


