உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கடந்த சில மாதங்களாக நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

நாளாந்தம் இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல நூற்றுக்கணக்கான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பல ஆயிரக்கணக்கான பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இலங்கையின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நகரம் ஆகும்.

கொள்ளையர்கள் பயணிகள், பாடசாலை மாணவர்கள், உல்லாசப் பயணிகளிடம் இருந்து பணம் மற்றும் உடைமைகளை கொள்ளை இட்டு வருகின்றனர்.

இது குறித்து உடைமைகள் மற்றும் பணத்தை இழந்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என பயணிகள், பாடசாலை மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறான கொள்ளைகள் பற்றி இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார், அரச பேருந்துகளில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர்.

பேருந்து நிலைய பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு இருந்த போதிலும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

பொலிஸார் பலமுறை முயற்சிகள் செய்தும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியாதுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் பயண செலவுக்கு கொண்டு வரும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்த பின்னர் அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மத்திய மலைநாட்டில் மிகவும் பிரபலமான நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், பயணிகள் நலன் கருதி நுவரெலியா பிரதேச உயர் பொலிஸ் அதிகாரி உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0