உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கடந்த கால அரசாங்கங்களினால் மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகக் கட்டி முடிப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தில் 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகள் பல, வசிப்பதற்குத் தகுதியற்றவையாகக் காணப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்தப்படும். அதேவேளை, பாதியில் கைவிடப்பட்ட வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான வீடுகளின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இன்னும் ஓரிரு மாதங்களில் அவை உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்றதொரு பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படும் என எதிர்க்கட்சியினர் பகற்கனவு கண்டனர். அத்துடன், மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று உலகளாவிய சூழலால் விலையேற்றம் இருந்தாலும், எவ்வித தட்டுப்பாடுமின்றி மக்கள் தங்களுக்குப் தேவையான பொருட்களைப் பெற்று வருகின்றனர்.

கடந்த கால உலகளாவிய நெருக்கடிகளால் 350 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, தற்போதைய அரசாங்கத்தின் முறையான பொருளாதாரக் கொள்கையினால் 325 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, எதிர்க்கட்சியினரின் நாசகாரப் பகற்கனவு கலைந்துள்ளது.

அத்துடன், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடன்களின்றி, இலங்கையின் சொந்த நிதியைப் பயன்படுத்தி ரம்புக்கனை – கலவெல அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தனிநபர் வருமானமும் 5,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், டீசலுக்கு 100 ரூபாயும், பெற்றோலுக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக வழங்கி வருகின்றது.

இன்று நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூக்குரலிட்டுச் சத்தமிடுபவர்கள் அனைவரும், கடந்த காலத்தில் ஊழல் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்பவர்களாவர். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போல, சிறைக்குச் செல்லவிருக்கும் இவர்களது சத்தமும் விரைவில் அடங்கிவிடும்.

கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும், அதனைத் தக்கவைக்கவும் சுயநல அரசியல்வாதிகள் பயன்படுத்திய ‘இனவாதம்’ இன்று இலங்கையில் முற்றிலும் காலாவதியாகிவிட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இனவாதத்திற்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். எனவே, நாட்டைச் சரியான அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்வதே எங்களது ஒரே இலக்காகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0