உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

என்.பி.பி. ஒரு மாகாண சபையிலாவது வென்றால் அரசியலிலிருந்து முழுமையாக விலகத் தயார்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றி பெற்றால், தான் அரசியலிலிருந்து முழுமையாக விலகத் தயார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசுக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று அரசின் இயக்கச் சக்தியான ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். ஆனால், தேர்தலை நடத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகின்றார்.

நான் பகிரங்கமாகச் சவால் விடுக்கின்றேன், தேசிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றி பெற்றால், நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு உரிய காலப்பகுதிக்குள் ஒருபோதும் அறிக்கையைச் சமர்ப்பிக்காது.

2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் வரை, இந்த அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0