பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் (Trial-at-Bar) முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி நகர்த்த முடியாது என விசாரணை மன்றம் (Trial-at-Bar) முன்னர் தீர்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதான பிரதிவாதிகளாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் அதிகாரி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்