உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

WASPAR திட்டத்தின் சார்பில் YWP – இளம் நீர்வாண்மையாளர் வடக்கு வட்டத்தினர் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

நயினாதீவின் நன்னீர்வளம் பற்றிய முதற்கட்ட பார்வையிடலை நோக்கமாகக் கொண்டு இக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

திட்ட ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் பேராசிரியருமான நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் நீரியல் ஆய்வினைப் பயிலும் துறைமையாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர்வள மாணவர்களும் இதனை இணைந்து முன்னெடுத்தனர்.

நயினாதீவில் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அமைவிடம், பரம்பல், பயன்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டது.

தண்ணீரின் தரம், உப்புச் செறிவு, உவர்நீராதல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து கண்டறிந்ததோடு அங்குவாழ்ந்து வரும் மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

முதல்நாளன்று பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கான நீர் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, இரண்டாம் நாளில் குளங்கள், கிணறுகளில் உள்ள தண்ணீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.

வீதியோரங்களிலும், ஊர் முனைகள், ஆலயச் சூழல், பள்ளிவாசல், கடற்கரை போன்ற மக்கள் சேரும் இடங்களிலும் கிராம மக்களுடன் உரையாட கிடைத்த வாய்ப்புக்களை அணியினர் நீர்சார்ந்த உரையாடல் களமாக மாற்றியமைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மீனவர்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பும், களஆய்வும் இடம்பெற்றது.

இறுதி நாளன்று காலையும் கள ஆய்வில் ஈடுபட்ட அணியினர் தாங்கள் கண்டறிந்த விடயங்களை நயினாதீவு மக்களிடையே வெளிப்படுத்தும் நோக்குடன் அன்று மதியம் நியாப் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான பலங்கள், குறைபாடுகள், எதிர்கால அச்சுறுத்தல்கள், கள ஆய்வின் போதான மக்களின் நீர் தொடர்பிலான உரையாடல்களில் வெளிப்பட்ட முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அத்தோடு, கள ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த பயணம் தொடர்பில் இவ்வாரம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற உள்ள வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டத்தின் வாராந்த இணைய வழி உரையாடல் நிகழ்வில் பங்கேற்று மேலும் பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

35 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0