கோலாகலமாக ஆரம்பமான வடமராட்சி வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று காலை 9:00 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமானது.
வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தலைமையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வரவேற்புரை இடம்பெற்றது. தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் வடமராட்சி கல்வி வலய பணிப்பாளருமான கனகசபை சத்தியபாலன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளருமான பாலன் முகுந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து விளையாட்டுக்களை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.
வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் போட்டிகளை கண்டுகளித்தனர். போட்டிகள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.


