உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 22 வயது இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, கலிகமுவ, மஹியங்கனை, மீரிகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துக்கள் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:-

வெலிவேரிய நகரில் ஓட்டோவுடன்மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவேரிய – தெல்கொட வீதியின் வெலிவேரிய நகர்ப் பகுதியில் தெல்கொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த ஓட்டோவை முந்த முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அதனுடன் மோதியுள்ளது.

இதன்போது, எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையிலிருந்து வந்த கப் ரக வாகனத்துடனும் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹேனேகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கப் வாகனத்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிகமுவ – அவிசாவளை வீதியில் பாதசாரி மீது பாய்ந்த மோ. சைக்கிள் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலிகமுவ – அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதியில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

கலிகமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற வயோதிபப் பாதசாரி மீது மிக வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி உடனடியாகத் தொரணகஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அருகம்மன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர், மற்றைய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய மூவரும் உடனடியாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநரான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாபாகடவெவ – மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகமவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய ஓட்டோ

மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல – பஸ்யால வீதியின் டி.எஸ். சந்திக்கு அருகில், பஸ்யால நோக்கிப் பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியின் ஒரு பக்கமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது பின்னால் வந்த ஓட்டோவின் ஓட்டுநருக்கு அதனை வேகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால், நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் ஓட்டோ பலமாக மோதி நசுங்கியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோவின் ஓட்டுநர் மற்றும் அதன் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஆகிய இருவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பஸ்யால பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். அத்துடன், படுகாயமடைந்த ஓட்டோவின் ஓட்டுநர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லொறியின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டியவில் பாதசாரி மீதுலொறி மோதி விபத்து

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொடை வீதியின் கதகந்தகொட சந்திக்கு அருகில் லொறி ஒன்று வீதியோரமாக நடந்து சென்ற பாதசாரி மீது அநாவசியமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி எல்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹிரண, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஐந்து விபத்துச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0