உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்..​

ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் மகாவலி ஆற்றின் பிரதான நீர் மூலமான ஹட்டன் ஓயா நதிக்குள் பாரிய அளவில் கோழிக் கழிவுகளைக் கொட்டிவிட்டு தப்பி செல்ல முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பழைய வீதி வழியாக, இரண்டு முக்கிய நீரோடைகள் சங்கமிக்கும் மகாவலி ஆற்றின் ஆரம்பப் பகுதிக்கு கோழிக்கழிவுகளுடன் ஒரு லொறி இரகசியமாக வந்துள்ளது.

அவ்வேளை அந்தப் பகுதியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹட்டன் பொலிஸார் சந்தேகமடைந்து குறித்த வாகனத்தை பின் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஆற்றில் கழிவுகளைக் கொட்டுவதற்கு தயாராக இருந்த இருவரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், லொறியையும் பறிமுதல் செய்தனர்.​

ஹட்டன் நகரில் உள்ள சில இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகள், கடந்த பல ஆண்டு காலமாகவே இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திருட்டுத்தனமாக இந்த ஆற்றிலும் டிக்கோயா வனராஜா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலும் கொட்டப்பட்டு வந்துள்ளன.

பொதுமக்கள் இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கமைய பொலிஸார் எடுத்த நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட நபர்கள் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0