இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசேட உயர் பதவி நியமனமானது நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான பதவி நிலை பிரதானி பொறுப்பை ஏற்கும் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, தனது சேவைக்காலத்தில் பல்வேறு கட்டளைப் பதவிகளையும், நிர்வாகப் பொறுப்புகளையும் திறம்பட வகித்த அனுபவம் மிக்க சிரேஷ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.