உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் ஆறு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய ஒன்பது பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் 34 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் ஏனைய ஆண்கள் இருவரும் 25, 44 வயதுடைய சுதர்சன் மற்றும் சத்தியசீலன் ஆவர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0