உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பழைய அரசியல் குழுக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு மீள முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
54 பார்வைகள்

தற்போதைய அரசு தனது முழுமையான ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன், அரசைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று (28) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு ஒருவேளை கவிழ்க்கப்பட்டால், மீண்டும் பழைய ஊழல்மிக்க அரசியல் சக்திகளே – சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சித் தரப்போ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்போ – ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து ஆட்சிப் பீடமேறினால் நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதைக்கே செல்லும். அது நாட்டை மீண்டும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளிவிடும்.

கடந்த 15 ஆண்டுகள் நான் இந்த அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணித்தவன். அந்த அனுபவத்தின் மூலம் அவர்களின் உண்மை நிலை, திறமையின்மை மற்றும் நேர்மையின்மை குறித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் அந்தக் கட்சிகளில் இருந்து விலகியதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துரைத்தேன். அதன் விளைவாகவே மக்கள் பழைய அரசியல் சக்திகளை முற்றாக நிராகரித்து, புதிய அரசியல் பயணத்திற்காகத் தற்போதைய தரப்புக்கு ஆணையை வழங்கியுள்ளனர்.

தற்போதைய அரசில் சில குறைபாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்த அனைத்தும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். எனினும், முந்தைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஊழலுக்கு எதிரான நேர்மையான நோக்கமும், அரச வளங்களைப் பாதுகாக்கும் எண்ணமும் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற காலத்தில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இருந்தது. ராஜபக்ஷ அரசில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக அவர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டின் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால், அந்தப் பொன்னான வாய்ப்பை அவர் பயன்படுத்தத் தவறியதாலேயே மக்கள் அவரைத் தேர்தலில் நிராகரித்தார்கள்.

தற்போதைய அரசு தனது ஐந்தாண்டு காலப் பகுதியில் நாட்டுக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத்தரத் தவறினால், அதற்குப் பிறகு ஊழலற்ற மற்றும் நாட்டை நேசிக்கும் ஒரு புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய அரசியல் குழுக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அவ்வாறு நடந்தால் நாடு மீள முடியாத வீழ்ச்சியைச் சந்திக்கும். எனவே, அந்தப் பழைய அழிவுக்குரிய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே தற்போதைய காலத்தின் மிக முக்கியமான முன்னுரிமையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0