மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த மதுபான போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக இன்று 28.05.2026 சந்தேக நபர் தனது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த சந்தேக நபரிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் எதிர்வரும் 03.06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றிம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்