மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!
வெசாக் பௌர்ணமி நாள் நாளை முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
நாளை காலை மஸ்கெலியா பொது மைதானத்தில் சிறப்பாக வெசாக் கூடுகள் அமைக்கும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அதில் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாவது இடத்திற்கு முறையே 10000 ரூபாய், 7500 ரூபாய், 5000 ரூபாய் பண பரிசில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 29 ஆம் திகதி மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக (தன்சல்) அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் ஏற்பாடு அனைத்தும் மஸ்கெலியா வர்த்தக சங்கம் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையினால் வழங்கப்பட உள்ளது.
நிகழ்வினை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
