கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம் நகரை அண்டிய பிரதேசங்களில் தரித்து நின்று பிக்மீ செயலி மூலம் வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதனைக் கட்டுப்படுத்தக் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்,
கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதேசசபைக்கு வருகை தந்து தவிசாளர் தலைமையில் கூட்டம் ஒன்றினை உடனடியாக ஒழுங்கு செய்து முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.