உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

காணிகளை விடுவிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட முக்கியமான தரப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அத்துடன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்த தரப்பாகவும் அவர்களே உள்ளனர். இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வலிகாமம் வடக்கிலேயே கணிசமான காணிகள் இராணுவத்தின் பிடியில் உள்ளன. அவை தொடர்பான முழுத் தகவல்களும் அறிந்தவராக வலிகாமம் வடக்குத் தவிசாளரே உள்ளார். அவரும் நேற்றைய கலந்துரையாடலில் அழைக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0