உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில் வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளில் முடிவு பெற உள்ளது.

எதிர்வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளில் சிவனடிபாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் வைகாசி விசாக பௌர்ணமி நாளான 30 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிகளில் இவ் வருட பருவ கால நிறைவுக்கான விஷேட பிரித் வைபவம் இடம்பெற்ற பின்னர் 2025/2026 க்கான சிவனடிபாத மலை பருவ காலம் நிறைவு பெற உள்ளது.

அன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ முகாம் வீரர்களால் பல்லக்கில் வைத்து எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் வைத்து நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் வணங்கிய பிறகு சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமிகள் பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லப்பட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0