உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கால்நடை வளர்ப்பார்களுக்கு தேவையான மேய்ச்சல் தரைகளை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து விடுவிக்க மாவட்ட உத்தியோகத்தர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளை வளர்ப்போர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் 49ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சுற்றறிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை பெற்றுக்கொள்வதற்கு கால்நடை பண்ணையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும்

இரணைமடுக்குளம் வான் பாய்கின்ற பகுதியில் நீர்ப்பாசன எல்லை காணியை  இருபக்கமும் நூறுமீற்றர் அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரவைக்கு ஒதுக்குமாறும்

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் பிடித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0