உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு நிகழ்வு வத்திராயனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில், சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வு வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது. வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. சி. சிவகுமார் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு வழிநடத்தப்பட்டது.

கிராமத்தின் மீதான பற்றும் கல்விப்பணியும்
பாராட்டுக் கௌரவம் பெற்ற ஆசிரியை திருமதி வில்வராசா உதயஸ்ரீ, யாழ்ப்பாணம் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப மற்றும் உயர்கல்வியைக் கற்றவர் என்பதும், வத்திராயன் கிராமத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்வித்துறையில் 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, முல்லைத்தீவு கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் (மு/கைவேலி அ.த.க) சிரேஷ்ட ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். அத்துடன், சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார்.

அவரது காத்திரமான கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி கௌரவித்த இந்நிகழ்வில், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0