உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று 24 ஆம் திகதி காலை அருட்தந்தை டொமினிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய தினம் திருவிழா திருப்பலி நுவரெலியா பிலக்பூல் நம் மாதா உயர் நிலை கல்லூரியின் அதிபர் அருட்தந்தை சிவந்த ரொட்ரிக்கொ அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித சூசையப்பர் திருச்சுரூப பவனி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து வாகன ஊர்தியில் வைத்து அங்கு இருந்து மக்கள் வழிபாட்டிற்காக பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகர் ஊடாக பொலிஸ் நிலைய வழியாக எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை சென்று மீண்டும் 2 ம் வீதியூடாக ஆலய வீதி வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் புனித சூசையப்பரின் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.

காலை.9.45 மணிக்கு திருவிழாவில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0