உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வகட்சி மாநாட்டை உடனே கூட்டுங்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் டொலர் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட தொலைபேசி உரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டம் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல், அனர்த்தங்களுக்குப் பின்னரான நிதி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாடொன்றை உடனடியாகக் கூட்டுமாறு அரசை வலியுறுத்துவது என்றும், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரடியாக ஜனாதிபதியைத் தொடர்புகொண்டு அறிவிப்பது என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த இணக்கப்பாட்டின்படி, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சிகளின் கூட்டுத் திட்டத்தை முன்மொழிந்து சர்வகட்சி மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த முன்மொழிவுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தான் தற்போது உத்தியோகபூர்வக் கடமைகள் நிமித்தம் மட்டக்களப்பில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனது மாகாண விஜயங்களை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியவுடன், இந்தச் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து தனது இறுதிப் பதிலைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அறியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் டொலர் கையிருப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ள தற்போதைய காலகட்டத்தில், இரு முக்கிய தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்றுள்ள இந்தத் தொலைபேசி உரையாடல் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0