உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste Management) நடவடிக்கைகளை மிகவும் சீரான முறையில் முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைவாக, வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரசு நிறுவனங்களுக்குள்ளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Single-use) பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதோ அல்லது பயன்படுத்துவதோ முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அரசு நிறுவனங்களுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசப்படும் ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கும் அனைத்து நிறுவனத் தலைவர்களும் தத்தமது மட்டங்களில் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, கடந்த வருடத்தின் (2025) ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையில் உள்ள விதிகளும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரசு நிறுவனங்களும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “3R” (Three R) கருத்தாக்கத்திற்கு இணங்கவே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதாவது: Reduce: கழிவுகளைக் குறைத்தல்,, Reuse: மீண்டும் பயன்படுத்துதல், Recycle: மறுசுழற்சி செய்தல் என்பனவாகும் .

இந்த முக்கிய சுற்றறிக்கையானது சுற்றாடல் அமைச்சின் முழுமையான உடன்பாட்டுடனும், வழிகாட்டலுடனும் வௌியிடப்பட்டுள்ளதாகப் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பசுமை நிர்வாகத்தை நோக்கி அரச கட்டமைப்பு நகர்வதற்கு இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

32 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0