உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது ஆணித்தனமான நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை நினைவஞ்சலி மற்றும் கஞ்சி விநியோக நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் முன்னிலையில் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது:-
“முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்தாலும், அந்த வடுக்கள் எமது மனதிலிருந்து என்றும் மாறப்போவதில்லை. இது திட்டமிட்ட முறையில் சர்வதேசத்தின் துணையோடு நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை.

எத்தனையோ போராட்ட வீரர்களும், மக்களும் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை. அவர்களது எண்ணங்களைச் சுமந்தே எமது பயணம் தொடரும்.

2009 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் எமது அரசியல் போராட்டம் ஓயவில்லை. தமிழர்களுக்கான விடிவு கிடைக்கும் வரை சர்வதேச சமூகத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்குவோம்.” – என்றார்.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் அருந்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0