இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.!
உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து நேற்று (12) மாலை புதிதாக திருமணமான இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம், உடப்பு, பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞன் தனது மிதிவண்டியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாகவும், அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.