ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட பகுதியில் 20 வயதுடைய ஒருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் மற்றும் 2 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.