உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தன்னை வாழ்த்திய ஜனாதிபதி அநுரவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஜய்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான ஆழமான உறவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

“வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்த மக்கள் இடையிலான வலுவான பிணைப்பால் இலங்கையும் தமிழகமும் இணைந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், வருங்காலம் பொருளாதார ரீதியாகப் பாரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக மக்களுக்கும் புதிய முதல்வர் விஜய்க்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, இரு பிராந்தியங்களின் முன்னேற்றத்துக்காக இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமாரவின் வாழ்த்துக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகின்றேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அன்பான செயலுக்குத் தனது ஆழ்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், அண்டை நாடான இலங்கையுடனான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

65 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

85 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

53 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

99 0 0